districts

img

பகுதி நேர நியாய விலை  கடை துவக்க விழா  

பெரம்பலூர், மார்ச் 27-  பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்தங்கால் மற்றும் மங்கூன் ஆகிய இரண்டு கிராமங்களில் கூட்டுறவுத்துறையின் சார்பில் பகுதி நேர நியாய விலை அங்காடிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் ஞாயிறன்று தொடங்கி வைத்தார்.  நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சோ.மு.மதியழகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், துணை பதிவாளர் செல்வராஜ், சார் பதிவாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;